Sunday, June 6, 2010

கூடியிருந்தால் ?


பிரத்யேகமாய் ஒரு மஞ்சம்
பிரேதக்குழி வசதியுடன்..,

உதிர எச்சில் உறைந்த கருக்கலைந்த சவங்கள்.
மீதிப்பசியுடன் பாதியாய் படுகுழி, .

முதல் கலவிக்காய் படபடக்கும் ஒருத்தி.
மழைக்கொதுங்கிய பறவை சிலிர்ப்பில்
மழலை மனம் தோய்ந்த நிர்வாணம்.

கடல் குடித்த பசியில் தயங்கும் ஒருவன்.
கட்டளை வரும்வரை காது கடிக்கும் காமம்.

சொல்லிப் புரிவதில்லை மன்மதக்கலை.
அழகோ?அபாயமோ? அடுத்த காலை

நிச்சயம் ஒன்று கூடியிருக்கும்
உறவிலோ குழியிலோ

கூடியிருந்தால்..,