Tuesday, May 10, 2011

வெட்டியான் கை.


பதறி நிற்கும் வெட்டியான் கை

பாவம் மட்டுமே செய்கை.

 

எழும்ப முயலும் என் மெய்.

எதற்கும் ஆகாத சக்கை.

 

விறைத்து வெடிக்கும் பேராசை.

உள்ளுறைந்து துடிக்கும் உயிரோசை.

 

வெறித்த பார்வை வினை இருத்தும்.

உரைத்த வார்த்தை உயிர் கொளுத்தும்.

 

தெளிந்த மனமோ தீர்வு கொள்ளும்

ஒளிந்த மனமோ தீர்வு காணும்.

 

கொள்கை காண்மின்.. உனை

கொள் கை காண்மின்.

 

எனை நம்பும் என் சாரார்

என்றெதயுமே சாரார்.

 

எமை நம்பிக் கண்டபின்

எதயுமே கூறார்.

 

எது கை எது மெய் எதையுமே

எனை கேளாய்.

 

சூழ்நிலை சுழற்சியில்

சோதனை முயற்சியில்

என்றுமே நீ வீழாய்....

 

கண்ணன் கடை விழி

கன்னியர் பக்கமே...

 

கர்ணன் இருக்கலாம்..

கவனமாய் இருக்கலாம்...

 

வெட்டியான் கைத்தடி

வீழட்டுமுன் காலடி.

 

வருகை நிமித்தம்

வாழுங்கள் கொஞ்சம்..

 

மீண்டு(ம்) வருவேன்

சந்திபோம் சபையிருந்தால்.....