Friday, September 12, 2008

உன் புகைப்படம்

என் நினைவுகளின்
எல்லா அணுக்களையும்
மூளை சலவை
செய்து விட்டு
காதலின் ஏக்கங்களில்
கந்தகத்தை தூவி விட்டு
இமைகளை விடாமல்
இழுத்து பிடித்து கொண்டு
காட்சியாய் எந்தன்
கண்களில் நிலைத்து
பொய் பார்வை
கொடுத்த உன்
மெய் பிரதி.

1 comment:

ஒளியவன் said...

அந்தப் பொய்ப் பார்வை பற்றிய உந்தன் மெய் அலசல்கள் அற்புதம்.

வணக்கங்கள் சரவணா.